திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனா்.
அண்ணாமலையார் கோயிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரே கடைகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேபோல, கோயிலுக்கு உள்ளே புதிதாக அன்னதானக் கூடம் மற்றும் கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.
1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் சிற்பக் கலைகளுடன் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பே கோபுரம் என ஒன்பது கோபுரங்கள் உள்ளன.
குறிப்பாக, கோயில் வளாகம் மற்றும் கோயிலுக்குள் கட்டுமானங்கள் நடக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்புறமும் வெளிப்புறமும் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் நீதிபதிகளாகிய நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்கிறோம் எனக் கூறி இருந்தனர். அதன்படி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ், சௌந்தா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து கோயில் வளாகத்தில் 4 மணி நேரம் ஆய்வு மேற்கொண்ட அவா்கள் ராஜகோபுரம் முன்பாக வணிக வளாகம் கட்டப்பட்டு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை நீதிபதிகள் ஆய்வு செய்து பார்வையிட்டனர். ராஜகோபுரம் முன்பு உள்ள ஏராளமான தேங்காய் பூ பழக்கடைகளை பார்வையற்று இந்த கடைகளை அகற்றுவது குறித்தும் கோவில் இணை ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர்.
தொடா்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள இடம் மற்றும் வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தின் கல்வெட்டுகள் எந்த ஆண்டுகள் கட்டப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பக்தர்களின் தரிசனம் குறித்தும் உடனடியாக ராஜகோபுரம் அருகே உள்ள அனைத்து கடைகளை அகற்றவும் அவர் வலியுறுத்தினார்.
இறந்து போன கோவில் யானை ருக்குவிற்கு வட ஒத்தவாடை வீதியில் நினைவு மண்டபம் கட்டுமான பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அம்மணி அம்மன் கோபுரம் அருகே மாடவீதி ஒட்டி பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள கியூ லைன் ஷெட்டுகளை பார்வையிட்டனர்.
அண்ணாமலையார் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ளே உள்ள சொகுசு விடுதிகள் குறித்தும் ஆய்வு மேற்கண்ட அவர்கள் கோசாலையை பார்வையிட்டு நான்காம் பிரகாரத்தில் யானை கட்டும் மண்டபம் அருகே மதில் சுவர் ஒட்டி கட்டப்பட்டு வரும் பக்தர்களின் தங்கும் அறைகள் கட்டுமானத்தை நிறுத்த உத்தரவிட்டனர். அந்த இடத்தை பார்வையிட்டபோது, திருக்கோவில் பொறியாளர்கள் முறையாக அளவில்லாமல் கட்டிடங்களை கட்டியதாக எச்சரித்த அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அன்னதான மண்டபம் அருகே கட்டப்பட்டு வரும் பக்தர்கள் கழிவறைகள் குறித்தும் பார்வையிட்டனர். தொடர்ந்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு உள்ளே ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் மனுதாரர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தங்களுடைய கட்டுமானம் குறித்து புகைப்பட ஆதாரங்களையும் குறித்து விளக்கினர்.
மேலும் திருவண்ணாமலை வணிகர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோர் அண்ணாமலையார் கோவில் கட்டுமானங்கள் குறித்து விளக்கி மனுக்களை வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட நீதிபதிகள் கோவில் நிர்வாகத்திடம் கோவில் உள்ளே வெளியே என பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து ப்ளூ பிரிண்ட் மட்டும் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது? என்பது குறித்த விரிவான ஆய்வுகளை செய்து அதற்குண்டான ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் கோவில் நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வரும் யாத்திரி நிவாஸ், சுகாதார வளாகங்கள், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா், கோயில் இணை ஆணையா் பரணிதரன், வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.





