Close
மார்ச் 7, 2026 1:40 மணி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணமங்கலம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வேலூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென கண்ணமங்கலம் சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்து மருத்துவரிடம் நோயாளிகளின் சிகிச்சை குறித்து கேட்டறிந்து வருகை பதிவேட்டில் இருந்த நோயாளிகளின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு சிகிச்சை மருத்துவத்தின் தரத்தை கேட்டறிந்து தொடர் சிகிச்சை பெற்றீர்களா எனவும் கேட்டறிந்தார்.

பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் பாம்பு கடி மற்றும் நாய் கடிக்கு அரசு மருத்துவமனையில் தகவல் பலகை ஏன் வைக்கவில்லை என கேட்டு மாலைக்குள் அனைத்து பணிகளும் முடிக்க உத்தரவு பிறப்பித்து மருந்து இருப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து அரசு மருத்துவமனை பின்புறத்தில் தனியார் மண்டபத்தில் இருந்து மனித கழிவுகள் வெளியேறுவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருமண மண்டபத்தை சீல் வைக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆரணி அருகே அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் திடீரென ஆய்வு செய்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top