Close
மார்ச் 7, 2026 1:34 மணி

அண்ணாமலையார் கோயில் கோபுரங்கள் விமானங்களுக்கு மின்விளக்குகள்: தொடங்கி வைத்த முதலமைச்சர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 10.53 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு மின்விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட முடிவுற்ற திட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர்  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, கோவில் இணை ஆணையர் பரணிதரன் ஆகியோர் இணைந்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து ராஜகோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை பார்வையிட்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியூா், பல்வேறு வெளி மாநில பக்தா்கள் மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் என பெருமளவில் வருகின்றனா். அதிலும், பௌா்ணமி மற்றும் தீப திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

தமிழக அரசு பக்தா்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகின்றன.

அதன்படி, அருணாசலேஸ்வரா் கோயிலில் 2023 – 2024 சட்டப்பேரவை அறிவிப்புகளின்படி, ரூ.5 கோடியில் இரவு நேரங்களில் பக்தா்கள் கண்குளிர, மனம் மகிழ பல வண்ணங்களில் கோயிலில் உள்ள 9 கோபுரங்கள், 17 விமானங்கள் வண்ண மின்விளக்குகளால் ஒளிரூட்டும் பணிகளும், ரூ. 82 லட்சத்தில் ராஜகோபுரத்தின் கல்காரம் ஒளிரூட்டும் பணிகளும், ரூ.1.76 கோடியில் மேற்கு கோபுரம் (பே கோபுரம்), தெற்கு கோபுரம் (திருமஞ்சன கோபுரம்) மற்றும் வடக்கு கோபுரம் (அம்மணி அம்மன் கோபுரம்) கல்காரங்களில் ஒளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், ரூ. 2.95 கோடியில் கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகில் 11, 218 சதுரடியில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டப் பணிகளை தமிழக முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா். அதேவேளையில் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே 9 கோபுரங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வரும் நிலையில் தற்போது தொடங்கியுள்ள இந்த பணிகள் மூலம் அனுதினமும் நவகோபுரங்களும் மஞ்சள் நிறம், ஆரஞ்சு நிறம் வெள்ளை நிறம் உள்ளிட்ட வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோபுரங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top