தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வருவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் வெளி மாநிலங்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் தீபாவளி பண்டிகை யொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, அதிகாலை 4 மணி முதலே பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா். காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். பகலில் வெயிலின் குறைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அதுமட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று இறைவனை வழிபட்டனர். இதனால் கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்கள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.




