உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் விவசாயிகள் கடையடைப்பு, சாலை மறியல் என, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு நீர்வரத்து மற்றும் வைகை நீர் பிடிப்பான வருசநாடு பகுதியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது.
இந்த சூழலில் , மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் வைகை அணை மதகுப்பகுதி மற்றும் 58 கால்வாய் நீர் செல்லும் கால்வாய் கரைப்பகுதிகளில் பலமிழந்த பகுதிகளை சாரல் மழையில் நனைந்தவாறு ஆய்வு மேற்கொண்டார்.
இதில், கரைப் பகுதியில் உள்ள உடைப்பு ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.




