Close
மார்ச் 7, 2026 2:53 மணி

கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை, எம்எல்ஏ ஆய்வு

அடித்து செல்லப்பட்ட தரைப்பாளத்தை ஆய்வு மேற்கொண்ட சரவணன், எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலசபாக்கம்  எம்எல்ஏ சரவணன், ஆய்வு மேற்கொண்டார்

அப்போது அவர் பேசியதாவது,

கலசப்பாக்கம் பகுதியில் ஏராளமான ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், தடுப்பணைகள் அதிகமாக உள்ளது. அதேபோல் கலசபாக்கம் பகுதி நீர்நிலை நிறைந்த பகுதி மக்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும், அதற்கு சாலைகள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்,

அதேபோல் கால்வாய்கள் மழை நீர் வெளியேற்றுவதற்கு உண்டான வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் அமைத்துக் கொடுக்க வேண்டும், மின்சார விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்,

ஏரி, ஆறு, கால்வாய் போன்ற பகுதிகளில் மக்கள் செல்வதற்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும், பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டி அறிவுறுத்த வேண்டும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும்.

ஏரி , ஆறு , கால்வாய் பகுதிகளில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று  முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், துரை சார்ந்த அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், வட்டாட்சியர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ராஜேஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் ஒன்றியம், கெங்கலமகாதேவிமங்கலம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை ஆய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், பத்தியவாடி பகுதி சார்ந்த வேண்டா என்பவர் மீது  இடி தாக்கி மரணமடைந்ததை அறிந்து, நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top