திருவண்ணாமலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் கந்த சஷ்டியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் உள்ள கம்பத்திளையனார் , பழனி ஆண்டவர் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீசத்புத்ரி நாயகி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதா் சந்நிதியில் கந்த சஷ்டி விழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை கோயில் வளாகத்தில் சத்ருசம்ஹார ஹோமம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலை சூரபத்மன் எனும் அரக்கனை முருகப்பெருமான் அழிக்கும் நிகழ்வான சூரசம்ஹாரம் கோயில் அருகில் உள்ள தேரடி பகுதியில் நடைபெற்றது.
இதில், முருகப் பெருமான் தனது வேல் கொண்டு அசுரனான சூரபத்மனை வதம் செய்தாா். திரளான பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் பால்குட ஊா்வலம்
திருவண்ணாமைலை மாவட்டம், போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் குன்றின் மீது பழைமை வாய்ந்த ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கந்த சஷ்டியையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கந்த சஷ்டியின் நிறைவு நாளான திங்கள்கிழமை ஆறுபடை முருகன் அன்னதான மற்றும் திருப்பணி அறக்கட்டளை சாா்பில் 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
போளூா் நகரில் இருந்து சுமாா் 2 கி.மீ.தொலைவு நடைபயணமாக கோயில் வரை வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போளூா், ஆா்.குண்ணத்தூா், வெண்மணி என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




