Close
மார்ச் 7, 2026 3:36 மணி

எளாவூர் சோதனை சாவடியில் கரை புரண்டு ஓடும் லஞ்சம். கவனிப்பாரா தமிழக முதல்வர்?

சோதனை சாவடி என்பது மற்ற மாநிலங்களில் இருந்து மற்றும் மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றுக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காக அரசு சார்பில் பல்வேறு மாநிலங்களின் எல்லை பகுதியில் நிறுவப்படுவதாகும்.

மேலும் வாகனங்களில் ஏற்பட்ட சரக்கு முறையாக அனுமதி பெற்றுள்ள வா? அங்ககிரிக்கப்பட்ட பொருட்கள் தானா? என்பதை இங்கு கண்காணித்து பிறகு தான் வாகனங்களை மற்றொரு மாநிலங்களுக்குள் அனுமதிப்பார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் போதை தரக்கூடிய பல்வேறு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் சோதனை சாவடியில் லஞ்சம் கொடுத்துவிட்டு அவற்றை உள்ளே கொண்டு வரப்படுவதாகவும், அனுமதி பெறாத பொருட்களையும் லஞ்சம் கொடுத்து தமிழகத்துக்குள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற ஒரு பெரும் ஊழல் சாம்ராஜ்ஜியம் எளாவூர் சோதனை சாவடியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழு கிணறு பகுதியில் ரூபாய் 137 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கணினி மயமாக்கப்பட்ட அதிநவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

இந்த சோதனை சாவடியில் போக்குவரத்து துறை, காவல்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவைத்து றை, ஆகிய துறைகள் சார்ந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலக கட்டிடங்கள், கிடங்கு வசதிகள், சோதனை சாவடி நிலையங்கள், சாலை குறியீடு பலகைகள், மற்றும் நவீன மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள், கணினி மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கும் நாள்தோறும் இந்த சோதனை சாவடி வழியாக ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. வாகனங்களின் பொருட்கள், வாகனங்களுக்கு ஏற்ப கட்டணங்கள் அரசு நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தை மட்டும் அதிகாரிகள் வசூலிக்க வேண்டும்.

ஆனால் இங்கு ஊழல் தலை விரித்து ஆடுகிறது. ஆர்டிஓ அதிகாரிகள், தனியார் எழுத்தாளர்களை பணியில் அமர்த்தி அரசு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் பணம் (லஞ்சம்) வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஒவ்வொரு வாகனத்திற்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேலாகவே அதிக கட்டணங்களை வசூலித்து செய்து வருவதாகவும், இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கொள்ளை லாபம் அடைவதாகவும் கூறப்படுகிறது

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போன்ற போதை பொருட்களும் மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைய லஞ்சம் கொடுத்தால் அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் தனியார் எழுத்தர்களை மூலம் இது போன்ற லஞ்ச லாவண்யங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.
எனவே இது போன்ற ஊழல் பெருச்சாளிகளின் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இங்கு உள்ள காலி எழுத்தர் பணியிடங்களை படித்து பட்டம் பெற்று வேலையில்லா இளைஞர்களை எழுத்தாளர்கள் பணியில் அமர்த்தினால் ஊழல் நடைபெறுவது தடுக்கப்படும்.

இது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒவ்வொரு துறையிலும் சிறந்து திட்டங்களையும் ஊழல் இல்லாத ஆட்சியை அமைத்து மக்களுக்கு நன்மை செய்து வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊழல் அதிகாரிகள் மீதும் இவர்கள் நியமித்த தனியார் எழுத்தாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் சீர்கேடு இது போன்ற செயல்கள் தான். இதனால் அரசு வருவாய் பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் அவ்வப்பெயர் ஏற்படும். மேலும் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
சில நேரங்களில் இந்த சோதனை சாவடியில் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தும் போதெல்லாம் கணக்கில் வராத பணமும் சிக்குகிறது. ஆனால் துறை ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

எனவே முதல்வர் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களை கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதலமைச்சர்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top