Close
மார்ச் 7, 2026 2:52 மணி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியர் தீக்குளிப்பு, துரிதமாக செயல்பட்ட காவலர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ் தாமரைப்பாக்கம் கிராமத்தில் சார்ந்த குமார் என்பவருக்கும் அவரது உறவினர் பக்கத்து வீட்டுக்காரருமான சரவணன் என்பவருக்கும் இடம் பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குமார் மற்றும் சரவணன் ஆகியோரின் இடத்தை புதுப்பாளையம் சர்வேயர்   அளவீடு பணியை மேற்கொண்டு உள்ளார். இந்த அளவீட்டின் போது குமார் பயன்படுத்தி வந்த இடத்தில் 1.5 அடி சரவணன் என்பவருக்கு சொந்தமானது என அளவீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குமாருக்கும் சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

இதனை அடுத்து குமார் மற்றும் அவரது மனைவி பூங்கொடி ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் தொடர்பாக உயர்மட்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதனால் ஆட்சியரை சந்திக்க முடியாத நிலையில் தம்பதியினர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த தீ அணைப்பான் கருவியை கொண்டு தம்பதிகள் மீது இருந்த தீயை அணைத்துள்ளார்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தீக்காயத்துடன் தம்பதியினரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.  கணவன் மனைவி இருவருக்குமே 40 முதல் 50 சதவீத அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நிலத் தகராறு தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தம்பதிகள் இருவரும் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top