Close
மார்ச் 7, 2026 1:47 மணி

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த எஸ்ஐஆர் நடைமுறையில் பொதுமக்களிடம் வழங்கப்படும் படிவத்தை நிரப்பி வழங்கினால் மட்டுமே அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த எஸ்ஐஆர் செயல்முறையை தமிழ்நாட்டில் ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்த்து திமுக தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ராஜா எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மாவட்ட தலைவருமான பழனி நாடார், மதிமுக துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top