Close
மார்ச் 7, 2026 1:41 மணி

எஸ்ஐஆர் சீராய்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வினை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கு மாவட்ட செயலாளர்  தரணிவேந்தன் எம்.பி தலைமையில் மனிதநேய ஜனநாய கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தினார்.

கழக மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், அம்பேத்குமார், ஜோதி, மாநில மதிமுக இலக்கைய அணி அமைப்பாளர் காரை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி இயக்கத்தினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மணிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தினர்.

அப்போது அவர் உரையாற்றியதாவது,

பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய  தலைமை பொறுப்பிலிருந்து கொண்டு இந்தியாவின் தனி தன்மை வாய்ந்த சுதந்திர அரசியல் தன்மை அனைத்தையும் கபளிகரம் செய்து வருகிறது. மத்திய புலனாய்வு துறை பாரதிய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக உள்ளது. இந்தியாவின் தேர்தல் ஆணையமும், பாரதிய ஜனதாவின் கபளிகரம் பட்டியலில் உள்ளது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வடநாட்டில் இருந்து வருபவர்களை தாக்குவதாக ஒரு பிரதமரே  பொய்பிரச்சாரம் செய்வது இந்தநாட்டில்தான் நடைபெறுகிறது. வாக்குசாவடி இயந்திரங்களில் பிரச்சனைகள் உள்ளது, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த மூன்று ஆண்டுகளாக, கர்நாடகாவில் நடந்த தில்லுமுல்லு, அதன் பிறகு மகாராஷ்டிராவில் நடந்த தில்லுமுல்லு, முன்றாவதாக பீகாரில் நடந்த வாக்கு திருட்டு தில்லு முல்லு, நான்காவதுயாக அரியானாவில் நடந்த தில்லுமுல்லுகளை வெளிகொண்டு வந்தார்.

பாஜகவிற்கு எங்கு வாக்காளர்களை நீக்க வேண்டும், எங்கு சேர்க்க வேண்டும் என்ற ராஜதந்திரம் தெரியும். இவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானலும் செய்ய முடியும் என நிலையை உருவாக்கி வெற்றி பெறுவதற்கான பலசூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள், என பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட மதச்சார்பற்ற கூட்டணியின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இயக்கங்களின் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, கிளை, வட்டக் கழக நிர்வாகிகள், அணிசார்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top