Close
மார்ச் 7, 2026 1:56 மணி

தென்காசி மாவட்டம் நிர்வாகத்திற்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

தென்காசி மாவட்டம் நிர்வாகத்திற்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறியதாவது: வருகிற 15 தேதியிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவில் பருவநிலை காலம் தொடங்க உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு பக்தர்கள் வரும்போது கட்டுக்கடங்காத வாகனங்கள் புளியரை சோதனைச் சாவடி வழியாக செல்ல வாய்ப்பு இருக்கிறது.

எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் நலன் கருதி சபரிமலை பருவகால நிலை முடியும் வரை தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய கனிமவள வாகனங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் செயலாளர் ஜமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top