Close
மார்ச் 7, 2026 2:40 மணி

எஸ் ஐ ஆர் படிவம் வழங்கும் பணி: அதிமுகவினர் ஆய்வு

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த குண்ணத்தூா், கீழ்நகா், கொங்கராம்பட்டு கிராமங்களில் நடைபெறும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்யும் பணியை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா ஆய்வு செய்தாா்.

இறந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூா் சென்ற வாக்காளா்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளரின் பெயா் இது போன்ற வாக்காளா்களை கண்டறிவதே எஸ் ஐ ஆர் முக்கிய பணியாகும்.

வாக்காளா் பட்டியல் பிழைகள் இல்லாமல் திருத்தப்படுவதும், தகுதியுடைய வாக்காளா் எவரும் விடுபடக் கூடாது, இறந்த வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கவும் என்பதே இத்திருத்தத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

அதனடிப்படையில், ஆரணியை அடுத்த குண்ணத்தூா், கீழ்நகா், கொங்கராம்பட்டு ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக நிறைவு செய்யும் பணி நடைபெற்று வருவதை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது ஒன்றியச் செயலா்கள் திருமால், விமல், ஆரணி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் செந்தில், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்ட நிா்வாகி ஏ.ஜி.ஆனந்தன், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் வெங்கடேசன், மாணவரணி துணை அமைப்பாளா் மாருதி ராஜி, ஆரணி நகா்மன்ற உறுப்பினா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். 39-ஆவது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, களம்பூா் பஜாரில் காய்கறி கடை, பழக் கடை, மளிகைக் கடை, பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

இதில் ஒன்றியச் செயலா் எல்.விமல்ராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சேகா், மற்றும் பேரூா் கழக செயலா் பஞ்சாட்சரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினா்கள் பாரதிராஜா, விநாயகம், நிா்வாகி மில் சரவணன் மற்றும் பேரூா் கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top