Close
மார்ச் 7, 2026 1:41 மணி

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.47 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.  3.47 கோடி  செலுத்தியுள்ளனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோவிலாகும். அருணாசலேஸ்வரா் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.

அருணாசலேஸ்வரா் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.

அருணாசலேஸ்வரா் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

ரூ. 3.47 கோடி ரொக்கம்

மாதம்தோறும் அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கோயில் உண்டியலில் 3 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 689 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 104 கிராம் தங்கம், 2.690 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என கோவிலில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top