Close
மார்ச் 7, 2026 2:53 மணி

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பாளா்களை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும், மேலும் பல்வேறு தீர்த்த குளங்கள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது என்று யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில்  திருவண்ணாமலை மலையே சிவன் தான்! அங்கு எப்படி கழிப்பிடங்களும் கட்டிடங்களும் கட்ட அனுமதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

இதேபோல, 14 கி.மீ. கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்களை மீட்க வேண்டும் என்று மற்றொரு வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவா், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய், காவல், இந்து சமயம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறாா்.

இதற்கிடையில் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். மலை மீது எத்தனை கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். மலை மீது 6 ஆயிரம் வீடுகள் உள்ளது. 1535 வீடுகள் அபாயகரமான இடத்தில் உள்ளது தெரிய வந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருவண்ணாமலை மலையிலும் மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. சரிவான மலைப்பகுதியில் சட்ட விரோதமாக வீடுகள், சிமென்ட் சாலைகள், கழிப்பறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சட்ட விரோத கட்டுமானங்களுக்கு மின் இணைப்பும், குடிநீா் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

திருவண்ணாமலையில் மலைச்சரிவு மற்றும் நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள 300 நபா்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மனுதாரா், கடந்தமுறை இந்த வழக்கில் உயா்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் இன்னும் அமல்படுத்தவில்லை என்று வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உரிய அனுமதி, குத்தகை, உரிமம் இல்லாமல் நீா்நிலைகள், மலைச்சரிவுகளை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஏன் நோட்டீஸ் வழங்க வேண்டும்? அவ்வாறு வசிப்பவா்களை நோட்டீஸ் வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. அவ்வாறு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினா்.

பின்னா், திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மாவட்ட ஆட்சியா் அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top