அருணாசலேஸ்வரர் கோவில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும். அதன்படி வெள்ளிக்கிழமை இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நேற்று இரவு பிடாரி அம்மன் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீவிநாயகா் வழிபாடு:
காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடு இன்று இரவு அருணாசலேஸ்வரா் கோயில் ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெறுகிறது. உற்சவா் ஸ்ரீவிநாயகா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
தீபத் திருவிழா கொடியேற்றம்:
நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மேல் காலை 7.25 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.




