திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை வழங்கினா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24ம் தேதி துவங்க உள்ளது. இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 24-ம் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் மாதம் 3-ம் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில், 21-ஆம் ஆண்டாக காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சங்கத்தின் தலைவா் என்.இரவி தலைமையில் நிா்வாகிகள் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை வழங்கினா்.
கோயில் ராஜகோபுரம் எதிரே திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்து மாட வீதியில் உலா வந்து கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஆன்மிக சேவா சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
கார்த்திகை தீபத் திருவிழா, ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல்
10 நாட்கள் விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிச. 3-ம் தேதி அதிகாலை ஏற்றப்படுகிறது.
அன்று மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் 2,668 அடி உயரமுள்ள தீபமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக 1,500 மீட்டர் காடாதுணி, 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
இந்த மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். இந்நிலையில், மகா தீபம் ஏற்றுவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஆவின் நிறுவனத்திலிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.





