பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நாடு முழுவதும் பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தது.
அவ்வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க காஞ்சிபுரம் மாவட்ட சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று விழிப்புணர்வு நடைபெற்றது.

இப் பேரணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். கலந்து கொண்ட பெண்கள் வன்முறைக்கு எதிராக செயல்படுங்கள், வன்முறையை பொறுத்துக் கொள்ளாதே, வன்முறை என்பது மனித உரிமை மீறல் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியும், பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோஷமிட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி உள்ளிட்ட மகளிர் திட்ட அலுவலர்கள் , பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்




