திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மக்கள் நண்பர்கள் குழுவிற்கு எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி 300 சீருடைகளை மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகத்திடம் வழங்கினார்.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 2025 திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம், மாவட்ட வனத்துறை நிர்வாகம், மாவட்ட காவல் துறையுனருடன் இணைந்து தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணி ஆற்றி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு (திளிறி) இளைஞர்கள் 300 பேருக்கு திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகத்திடம் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி 300 சீருடைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு 1999ஆம் ஆண்டு முதல் கடந்த 26 ஆண்டுகளாக எந்தவொரு பிரதிபலனும் பாராமல் தொடர்ந்து சமூக சேவை பணி ஆற்றி வருகிறார்கள். தொடர்ந்து சேவை பணி ஆற்றும் திளிறி இளைஞர்கள் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2004 ஆண்டு முதல் தொடர்ந்து 21 ஆண்டுகளாக திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் சீருடைகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மக்கள் நண்பர்கள் குழு நகர துணை ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், ஜோதிவெங்கடேசன், வழக்கறிஞர் ஜோதிகா, சௌந்தர், அருண்குமார், சிஜித், சண்முகசுந்தரம் , வீரையன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
அருணை மருத்துவக் கல்லூரி
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 2025 திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம், மாவட்ட வனத்துறை நிர்வாகம், மாவட்ட காவல் துறையுனருடன் இணைந்து தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணி ஆற்றி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு (திளிறி) இளைஞர்கள் 500 பேருக்கு திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகத்திடம், அருணை மருத்துவக் கல்லூரி இயக்குனர் எ.வ.வே. கம்பன், வழங்கினார். மக்கள் நண்பர்களுக்கு குழுவிற்கு சீருடைகளை வழங்கிய மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு நண்பர்கள் குழு தலைவர் ஆறுமுகம் நன்றி தெரிவித்தார்.





