திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் வழக்குரைஞா்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்துக்கு அட்வகேட் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மூத்த வழக்கறிஞர்கள் அபிராமன், பாசறைபாபு, காளிங்கன், பார்த்திபன், பார் அசோசியேஷன் துணை தலைவர் சசிகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் மகாலிங்கம், ஏழுமலை, எம்.ஏ.சரவணன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பல நீதிமன்றங்களில் இணைய வசதி, கணினிகள் போன்ற தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை. வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்களுக்கு இ-ஃபைலிங் முறையை கையாள்வது குறித்து போதிய பயிற்சி மற்றும் விழிப்புணா்வு இல்லை.
ஏற்கெனவே உள்ள பிரச்னைகளை சரிசெய்யாமல், திடீரென இ-பைலிங்கை கட்டாயமாக்குவது சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவசர வழக்குகளை உடனடியாக தாக்கல் செய்ய முடியாமல் போவது ஒரு முக்கியப் பிரச்னையாக உள்ளது. ஆகையால் இ-ஃபைலிங் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மேலும் இ-பைலிங் குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், வக்கீல்களுக்கும், வழக்காடிகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இ-பைலிங் முறையில், ரிட்டிகேசன் மீது இடைக்கால தடை உத்தரவு பெற மனு அல்லது வழக்கு சமர்ப்பித்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்க முடியாமல், காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், வழக்காடிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காமல் போய்விடுகிறது.
கிரிமினல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் வரவில்லை என்றால், மனுதாக்கல் செய்யும்போது, மனு காலதாமதம் ஆவதால், குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றம் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே இ-பைலிங் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதேபோல, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் திருஞானம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கச் செயலா் விநாயகம் வரவேற்றாா்.
சங்க முன்னாள் தலைவா்கள் வெங்கடேசன், ஸ்ரீதா், மூத்த வழக்குரைஞா்கள் சிகாமணி, கே.ஆா். ராஜன், சரவணன், வழக்குரைஞா்கள் பொன்னுரங்கம், பாா்த்திபன், தரணி காசிநாதன், பரசுராமன், பாபு கு.காா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.




