திருவண்ணாமலையில் 10 நாட்களாக நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா 2025-ன் போது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு சேவை பணியாற்றினார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழாவில் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் மாவட்ட வனத்துறை மாவட்ட காவல் துறையுடன் இணைந்து தீபத் திருவிழாவில் போக்குவரத்து காவல் பணி, இரவு காவல் பணி, மலை சுற்றும் பாதையில் பாதுகாப்பு பணி, மலை மீது தீ தடுப்பு பணி, காவல் உதவி மையம் பணி என பல்வேறு பணிகளை சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் .
அதில் சிறப்பாக பணியாற்றிய 250 திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பட்டிமன்ற நடுவர் சபரி, ஆசிரியர் ஜெய்பிலிப்ஸ் சாமிதம்பி, அன்பரசு, சுரேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரவீன்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பாக சேவை பணியாற்றிய இளைஞர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
இவ்விழாவில் மூத்தோர் தடகள சங்க மாவட்டதலைவர் கார்த்திவேல்மாறன், கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் ச.குமார், கம்பன் ஐடிஐ முதல்வர் ராமச்சந்திர பிரபு, ராஜலட்சுமி பாலிடெக்னிக் உதவி பேராசிரியர் ராகுல்காந்தி, அருணை இலக்கிய பொருளாளர் ரவிச்சந்திரன், குத்துசண்டை பயிற்சியாளர் மணிமாறன், குணா, சௌந்தரபாண்டியன், தினேஷ், அருண்குமார், ஆகாஷ், சுஜித், தேன்மொழி உள்பட நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மல்லிகா அர்ஜூனன் நன்றி கூறினார்.




