Close
மார்ச் 7, 2026 2:51 மணி

கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 26.12.2025 அன்று கள்ளக்குறிச்சியிலும், 27.12.25  அன்று திருவண்ணாமலையிலும் கள ஆய்வு மேற்கொண்டு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா்.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞா் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 631 கோடி 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை முதல்வா் திறந்து வைத்து, ரூ. 63 கோடி 74 ஆயிரம் மதிப்பிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் .

63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2 இலட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு 1400 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 12 கோடியே 17 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடம்,

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 30 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், 32 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய காய்கறி, பூ மற்றும் பழச் சந்தை வளாகம், 55 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் திருவண்ணாமலை மாநகரத்திற்கான குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், 60 இலட்சம் ரூபாய் செலவிலான கூடுதல் கட்டடம் மற்றும் 30 இலட்சம் ரூபாய் செலவிலான துணை சுகாதார நிலையம்;

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோயில் காவல் நிலையம்;

உயர்கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 12 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 4 ஆய்வுக் கூடங்கள்;

போளூர், வடமாதிமங்கலம், வடிஇலுப்பை, தச்சூர், நாரையூர், மாமண்டூர், இளங்காடு, வெளுங்கனந்தல் ஆகிய அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள்,

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவண்ணாமலை-அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-திருவத்திபுரம் சாலை ஆகிய இடங்களில் 161 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் இருவழித்தடத்திலிருந்து அகலப்படுத்தப்பட்ட நான்கு வழித்தட சாலைகள்;

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள், உயர்மட்டப் பாலங்கள் முதலிய 243 முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் 571 கோடியே 96 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான 312 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

இதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்  தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு துறை சார்ந்த அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்வர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடுகள் மற்றும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. சுதாகர், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்பி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top