Close
மார்ச் 7, 2026 2:51 மணி

இரும்பு கடை வியாபாரிகள் நலச் சங்க 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்

ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதி இரும்பு கடை வியாபாரிகள் நலச் சங்கம், 2000-ஆம் ஆண்டு தொடங்கி குடும்ப ஆண்டு விழாவாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதி இரும்பு கடை வியாபாரிகள் நலச் சங்கமானது தற்போது 2025-இல் 25-ஆம் ஆண்டில் வெள்ளி விழாவாக கொண்டாடி வருகிறது. இதற்கான விழா, ஆவடி எஸ்.பி. பாபு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் எஸ்.பி. தங்கத்துரை தலைமை வகித்தார். மேலும் விளையாட்டுப்போட்டி, கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற குடும்ப மாணவர்களுக்கு பரிசுத்தொகுப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சி.சரவணன், ஜே.முத்துலிங்கம், எஸ்.தர்மராஜ், ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் யு.அகமது, வி.எஸ்.வி.வாசு, என்.ரத்தினபாண்டியன், கே.வேல்முருகன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா வாழ்த்துரை வழங்கி வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பரிசு வழங்கி சிறப்பு செய்தார். எஸ்.முத்து, வி.எஸ்.பி.செல்வம், எஸ்.சித்திரைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளிவிழா ஆண்டு நினைவுப் பரிசாக உறுப்பினர்களுக்கு வெள்ளி நாணயம் கையொப்பமிட்டு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், சங்க குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top