தாயுமானவர் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் ஏதாவது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது சரியான முறையில் வழங்கவில்லை என்றாலோ எந்தநேரத்திலும் என்னிடம் தொடர்பு கொண்டு கூறுங்கள் நான் உங்களுக்கு கொடுப்பதற்கு தயாராக உள்ளேன் என்று சரவணன் எம்எல்ஏ கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குட்டக்கரை ஊராட்சியில் குக்கிராமமான குட்டக்கரை ஊராட்சி பட்டறைக்காடு கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
மொத்தம் உள்ள குடும்ப அட்டைகள் விவரம், இதன் மூலம் பயன் பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அந்த திட்டம் தமிழக மக்கள் மூலம் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தாய்மார்கள் திட்டத்தில் மூத்த குடிமக்கள் அனைவரும் முழுமையாக பயன்பெற்று வருகிறார்கள் என்றார்.
தொடர்ந்து ‘வீடு தேடி ரேஷன் பொருட்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதால் யாருடைய உதவியும் இல்லாமல் நேரடியாக ரேஷன் பொருட்கள் பெற்று வருகிறோம். அதனால் தொடர்ந்து 6 மாத காலமாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளோம்’ என முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் எம்எல்ஏவிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாதம் தோறும் திட்டத்தின் மூலம் 3 நாட்கள் நேரடியாக வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை முறையாக செயல்படுத்துங்கள் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு எம்எல்ஏ அறிவுரை வழங்கினார்.
தாயுமானவர் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் ஏதாவது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது சரியான முறையில் வழங்கவில்லை என்றாலோ எந்தநேரத்திலும் என்னிடம் தொடர்பு கொண்டு கூறுங்கள் நான் உங்களுக்கு கொடுப்பதற்கு தயாராக உள்ளேன் என்று எம்எல்ஏ கூறினார்.




