Close
மார்ச் 7, 2026 1:26 மணி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1909ம் ஆண்டு செப். 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 1969ம் ஆண்டு பிப். 3ம் தேதி அவர் உயிரிழந்தார். பிரபல அரசியல்வாதியும் திமுக தலைவருமான இவர், சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வராகவும், தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

பேரறிஞர் அண்ணா 57 வது நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

இந்த அமைதி பேரணியானது திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இருந்து துவங்கி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் , நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இந்தப் பேரணியில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாமன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், அணி அமைப்பாளர்கள் நேரு ,ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், மாமன்ற உறுப்பினர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு வந்தவாசி நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு நகர திமுக செயலாளர் தயாளன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் நகர மன்ற தலைவர் லியாகத் பாஷா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று அண்ணாதுரை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சிவக்குமார், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், அண்ணாமலை, ராமஜெயம்  மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top