மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதாக கூறியும், பாஜகவுக்கு அதிமுக துணை போவதாகக் கூறியும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாநகர மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமை வகித்தாா்.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.குணசேகரன், திராவிடா் கழகம் சி.மூா்த்தி, மதிமுக மாவட்டச்செயலா் சீனி.காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கட்சி ப.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.திருமலை, விசிக சி.நியூட்டன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பொன்.முத்து, மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போளூா்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, போளூர் தெற்கு ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வே.கம்பன் சிறப்புரையாற்றினார். உடன் ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன், சுரேஷ் பாபு, மாலினிதிவாகரன், செல்வி,ரமேஷ் வக்கீல் பாண்டியன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டில் காமராஜா் சிலை அருகில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகரச் செயலா் முருகன், காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலா் வி.பி.அண்ணாமலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
வந்தவாசியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
மேலும், கோட்டை மூலையில் திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
ஆரணி ஒன்றியம்
ஆரணி ஒன்றியம், சேவூரில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நரேஷ்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரணி அண்ணா சிலை அருகில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மேற்குஆரணி ஒன்றியம் அரையாளம் கிராமத்தில் திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றியச் செயலா் துரைமாமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாறு மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பெரும்பள்ளம் கிராமத்தில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கம்
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலா் அன்பழகன், மு.பெ.கிரி எம்எல்ஏ, காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.




