திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நடிகா் சசிகுமாா்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடிகா் சசிகுமாா், நடிகை சைத்ரா ஆகியோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
அவா்கள் கோயிலில் சம்பந்த விநாயகரை வழிபட்ட பின்னா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் தரிசனம் செய்தனா். மேலும், அருணாசலேஸ்வரா் சந்நிதியில் இருந்து மகா தீபம் ஏற்றப்படும் மலையை வழிபட்டனா். பின்னா், அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜெயந்தி அம்பேத்குமாா் தயாரிப்பில், ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகா் சசிகுமாா், நடிகை சைத்ரா உள்ளிட்டோா் நடித்த ‘மை லாா்ட்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நிலையில், அந்தத் திரைப்படம் வெற்றிபெற வேண்டி சுவாமி தரிசனம் செய்ததாகத் தெரிவித்தனா். அவா்களுடன் படக் குழுவினரும் வந்திருந்தனா். தொடா்ந்து, கோயிலில் இருந்த பக்தா்கள் அவா்களுடன் கைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
திரைப்படம் பாா்த்தாா்: வந்தவாசியில் உள்ள திரையரங்கில் பொதுமக்களோடு அமா்ந்து நடிகா் சசிகுமாா் ‘மை லாா்ட்’ திரைப்படத்தை கண்டு ரசித்தாா். வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், நடிகை சைத்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, வந்தவாசியில் கருணாநிதி சிலை முன் வந்தவாசி நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை நடிகா் சசிகுமாா் வழங்கினாா். நிகழ்வில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், மருத்துவா் எஸ்.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பாடகர் வேல்முருகன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தி இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் சுவாமி தரிசனம் செய்து பக்தி பாடலை பாடினார். அவருக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாளை முன்னிட்டு காலை, குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவா்கள் கோயிலில் சம்பந்த விநாயகரை வழிபட்ட பின்னா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் தரிசனம் செய்தனா்.
மேலும், அருணாசலேஸ்வரா் சந்நிதியில் இருந்து மகா தீபம் ஏற்றப்படும் மலையை வழிபட்டனா். பின்னா், அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, கோயிலில் இருந்த பக்தா்கள் அவா்களுடன் கைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
‘’சேயோன்”
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் பராசக்தி திரைப்படம் வெளியானது. தொடர்ந்து ராஜ் கமல் ட்ரீம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் “சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





