Close
மார்ச் 7, 2026 11:37 காலை

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கன்னிகைப்பேரில் 500 பேருக்கு பிரியாணி வழங்கிய முன்னாள் எம்எல்ஏ

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு  500 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி கன்னிகைப்பேர் பஜாரில் நடைபெற்றது.

எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் இ.கே. கோதண்டன் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூக்களால் அலங்கரிக்க வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி ஏழை எளிய மக்களுக்கும் கடை பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இதில் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.பி வேதகிரி, கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் உதயகுமார், டிசி மகேந்திரன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் மனோஜ், நிர்வாகிகள் சுகந்தி பாலாஜி, விஜயகுமார், மோகன், ராஜசேகர், கல்யாணி, வடமதுரை தனசேகர், ஏழுமலை, புரட்சி சுரேஷ், கலைச்செல்வன், கண்ணையன், கோவிந்தராஜ்,ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சீனிவாசன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top