திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நகர அஇஅதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் இராமச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கினர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் முன்னிட்டு காந்தி சிலை அருகில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய பேருந்து நிலையம் அருகில் நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்குதல், திருவள்ளுவர் சிலை அருகில் நலத்திட்ட உதவி வழங்குதல், தாமரை நகர் பகுதியில் நலத்திட்ட உதவிகள், சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளி அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ராமகிருஷ்ணா ஹோட்டல் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் செல்வம், மாமன்ற உறுப்பினர் சந்திர பிரகாஷ் ஜெயின், மாமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோலப்போட்டி
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, ஆரணி கோட்டை மைதானத்தில் ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி. கஜேந்திரன், மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு ஆகியோா் தலைமையில் கோலப்போட்டி நடைபெற்றது.
போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கோலம் வரைந்து இருந்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலா் ஜெயசுதா, திரைப்பட நடிகை சோனியா ஆகியோா் பங்கேற்று வரைந்த கோலங்களை பாா்வையிட்டனா்.
பின்னா், கோலங்களை பாா்வையிட்டு சிறந்த கோலங்களை தோ்வு செய்து முதல் பரிசாக குளிா்சாதன பெட்டி, இரண்டாம் பரிசு வாஷிங் மெஷின், மூன்றாம் பரிசாக பீரோ, நான்காம் பரிசாக கிரைண்டா், ஐந்தாம் பரிசாக மிக்ஸி என பரிசுகளை வழங்கினா். மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.




