Close
மார்ச் 7, 2026 1:34 மணி

காரியாபட்டி அருகே சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு கட்டிடங்களை நிதி அமைச்சர் தங்கம் தினசரி திறந்து வைத்தார் .

ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசகுலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கீழே உப்பிலி கொண்டு கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம், கஞ்சமின் நாயக்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடம், முஸ்தகுறிச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிதி அமைச்சர் தங்கம் அரசு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், காரியாபட்டி திமுக ஒன்றியச் செயலாளர் கண்ணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட கழக பொருளாளர் வையம்பட்டி வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அரசகுலம் சேகர், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கருப்பு ராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ராம் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top