Close
மார்ச் 7, 2026 11:38 காலை

வீடு அளவீடு செய்ய லஞ்சம்: நில அளவையா் கைது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.

போளூா் நகராட்சி வி.எஸ். பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்ராஜ். இவா், தான் வசிக்கும் வீட்டை அளவீடு செய்து கொடுக்குமாறு போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையா் சக்திவேலிடம்  அண்மையில் மனு அளித்தாா்.

ஆனால் சர்வேயர் சக்திவேல், சின்னராசுவின் வீட்டை அளக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன் சின்னராசு மீண்டும் அணுகியபோது, ‘உங்கள் வீட்டை அளக்க ரூ.6000 லஞ்சம் தரவேண்டும்’ எனகேட்டாராம்.

ஆனால் லஞ்சம் தர விரும்பாத சின்னராசு, இதுகுறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் அருள்பிரசாத் தலைமையிலான 10 பேர் கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் ரூ.5 ஆயிரம் நோட்டுக்களை சின்னராசுவிடம் கொடுத்தனுப்பினர்.

இதனை சர்வேயரிடம் அவர் வழங்கினார். அதனை அவர் பெற்று எண்ணிக்கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயர் சக்திவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்த ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top