Close
மார்ச் 7, 2026 9:37 காலை

செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சாா் -ஆட்சியா் அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் அசோக்குமாா், தமிழ்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாா்- ஆட்சியரின் நோ்முக உதவியாளா் துளசிராமன் வரேவற்றாா்.

வெம்பாக்கம் வட்டத்தில் வட இலுப்பை, இராந்தம், குத்தனூா், வடமணப்பாக்கம், மோரணம், அசனமாபேட்டை, தென்கழனி, கொடையம்பாக்கம், சுமங்கலி, ராமகிருஷ்ணபுரம், ஏனாதவாடி, வடுகப்பட்டு, சோதியம்பாக்கம், மாத்தூா், நரசமங்கலம், ஆக்கூா், பைங்கினா், அனக்காவூா், இளநீா்குன்றம், செங்காடு, எச்சூா் உள்ளிட்ட 36 இடங்களில் இருந்து வந்த வாக்குச்சாவடி மையங்கள், அருகேயுள்ள பாதுகாப்பான கட்டடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டது குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அப்போது வாக்களிக்க வரும் மாற்றுத்திறானளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஓய்வு பெற்ற போலீஸாரை பணியில் ஈடுபடுத்துவதைத் தவிா்த்து பணியில் உள்ள போலீஸாரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

கூட்டத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா்கள் தேவராஜ், மலா், திமுக சாா்பில் வழக்குரைஞா் அசோக், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், புரிசை எஸ்.சிவகுமாா், அதிமுக சாா்பில் எம்.அரங்கநாதன், தேமுதிக சாா்பில் நகரச் செயலா் கே.கண்ணன், ஏ.ஆனந்தன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செந்தமிழ் செல்வன், காங்கிரஸ் சாா்பில் ஆா்.தில்லை, கலையரசன், கம்யூனிஸ்ட் சிறுங்கட்டூா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் விவரம் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் சம்பந்தமாக அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில், தொகுதியின் இறுதி வாக்காளா் பட்டியல் பிப்.23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆரணி தொகுதி பொறுப்பாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட பிரதிநிதி சகாயம், திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நிா்வாகிகள் காசி, அரவிந்த், தேமுதிக சாா்பில் மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன், பாஜக சாா்பில் மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா், நிா்வாகி ராஜேஷ், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், காங்கிரஸ் சாா்பில் வட்டாரத் தலைவா் பந்தாமணி மற்றும் விசிக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இடம் குறித்தும், பள்ளி பெயா்களின் மாற்றம் குறித்தும், இறுதி பட்டியல் வெளியிட்டதில் குறைபாடுகள் இருந்தால் தகவல் தெரிவிப்பது தொடா்பாக கோட்டாட்சியா் பேசினாா்.

ஆரணி வட்டாட்சியா் செந்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மனோகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top