திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் புதிய நியாய விலை கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பயணியர் நிழற்கூடங்கள் உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் கிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
புதிதாக திறக்கப்பட்ட நியாய விலை கடை பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பினை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பேசுகையில், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக பழைய கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த நியாய விலை கடை, அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பயணியர் நிழற் கூடம் உள்ளிட்டவை மக்கள் கோரிக்கையாக இருந்து வந்தது.
கோரிக்கைகளை ஏற்று புதிய கட்டடங்கள் அமைத்து அங்கன்வாடி மைய குழந்தைகளின் பயன்பாட்டிற்கும், குடும்ப அட்டைதாரர்கள் தடையில்லா ரேஷன் பொருள்கள் பெறுவதற்கும் புதிய நியாய விலை கட்டிடங்கள், பயணிகள் பேருந்தில் நின்று செல்வதற்கு நிழற் கூடம் மற்றும் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தி சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் பெண்கள் மாணவ, மாணவிகள் வரை பயன்பெறுவதாகவும் தெரிவித்தார்.
செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வடக்கில் ஜவ்வாது மலையும், தெற்கில் கல்வராய மலையும் இணைக்கக்கூடிய மிக நீண்ட தொகுதியாக செங்கம் சட்டமன்ற தொகுதி உள்ளது. அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி சாலைகள், மேம்பாலங்கள், புதிய கட்டடங்கள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து உள்ளனர். எனவே பின் தங்கி இருந்த செங்கம் சட்டமன்றத் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறி உள்ளதாக பேசினார்.
நிகழ்ச்சியில் செங்கம் நகர திமுக செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், நகர திமுக பொருளாளா் சீனுவாசன், இளைஞரணி நிா்வாகிகள் மணி, பாலு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாகீா்பாஷா, சத்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.




