Close
மார்ச் 13, 2026 9:44 மணி

வாடிப்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் சமுதாயக்கூடம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் திறப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்துகளில் ஊராட்சி மன்ற அலுவலகம், சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடைகளின் திறப்பு விழா நடந்தது.

இந்த விழாவுக்கு, வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, திறந்து வைத்தார். இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன், துணைத்தலைவர் கார்த்திக், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அயூப்கான், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஊராட்சி செயலாளர்கள் செல்வம், சரசு,புஷ்பலதா, மகாராஜன், தனலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் அய்யாவு, முருகன், தீனதயாளன், குருநாதன், அழகுகாளை, கார்த்திகா உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top