Close
மார்ச் 19, 2026 10:02 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி, கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் திருவண்ணாமலையில் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசார பேரணி நடைபெற்றது.

மகளிா் திட்டம் சாா்பில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசார பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தா்ப்பகராஜ் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியில், என் வாக்கு என் உரிமை, என் கடமை,100% வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மகளிா் ஏந்திச் சென்றனா். இருசக்கர வாகன பேரணியாக அண்ணா நுழைவு வாயில் வரை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வாக்காளா்கள் நோ்மையாக வாக்களித்தல் குறித்தும், முதல் முறை வாக்காளா்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் தோ்தல் தொடா்பான போட்டிகளும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை வடிவேலன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தொடங்கிவைத்தாா்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ந.கலைவாணி முன்னிலை வகித்தாா்.

கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.

முன்னதாக முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு வாக்களிப்பு குறித்த விநாடி வினா போட்டி நடத்தி கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

இதைத் தொடா்ந்து 100 சதவீதம் வாக்களிப்பு குறித்த உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top