Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

கோபி தொகுதியில் ரூ.1.37 கோடியில் சாலை, வடிகால் அமைக்கும் பணி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம்

ஈரோடு

கோபி தொகுதியில் மலை வாழ்மக்களுக்கு நலத்திட்ட உதவி அளித்த முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ-கே.ஏ. செங்கோட்டையன்

கோபி தொகுதிக்குள்பட்ட கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையம், ஏலஞ்சி, கரளியம் உள்ளிட்ட 5-க்கும் மேற் பட்ட இடங்களில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப் பீட்டில் சாலை வசதி மற்றும் வடிகால் அமைப்பதற்கான பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி எம்எல்ஏ-வுமான கே.ஏ. செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து கடம்பூர் தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் கோபி நகர தகவல்தொழில் நுட்ப அணி செயலாளர் முத்துரமணன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட மலைகிராம மக்களின் குடும்பங்களுக்கு இரவு நேரத்தில் அச்சமின்றி வெளியில் செல்ல உதவும் வகையில் அதிகளவில் வெளிச்சம் தரும் டார்ச் லைட்டுகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இதில்நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் வனத்துறை அதிகாரிகள், மலைக்கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வா கிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top