Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

ஈரோட்டில் 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு வண்டிகள்: அமைச்சர் முத்துசாமி  வழங்கல்

ஈரோடு

ஈரோட்டைச் சேர்ந்த 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டில் வண்டிகளை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி வழங்கினார்.

ஈரோட்டில் 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு வண்டிகளை அமைச்சர் முத்துசாமி  வழங்கினார்.

ஈரோட்டைச் சேர்ந்த 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டில் வண்டிகளை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி வழங்கினார்.]

தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 127 சாலையோர சிறு வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்க, 1.05 கோடி ரூபாய் அரசு அனுமதித்தது. இதுவரை, 50 வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று, 77 வியாபாரிகளுக்கு இலவசமாக வண்டிகள் வழங்கப்பட்டன.

அவர்கள் வியாபாரம் செய்யும் போது காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் போன்றவற்றை பாதுகாப்பாக அதில் சேமித்து வைக்க வண்டிகள் உதவும், என்றார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top