Close
மே 20, 2024 4:35 மணி

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்யக்கோரி கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் கோரிக்கை

ஈரோடு

ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் 30வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்யக்கோரி கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் 30 -ஆவது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு அச்சங்க தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கௌரவத தலைவர் பழனியப்பா நாராயணசாமி, செயலாளர் பாலு என்ற தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் சிவ சண்முகம், சாந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  சொத்து வரி உயர்வு, சொந்த கட்டிடங்களுக்கு 10 சதவீதமும், வாடகை கட்டிடங்களுக்கு 20 சதவீதமும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்து, சிறு, குறு தொழில்கள் பாதிப்புக்குள்ளாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மேட்டூர் சாலையில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ள தடுப்பு சுவரினை அகற்றி, போக்குவரத்து நெரிசலை குறைத்திட வேண்டும்.

மீனாட்சி சுந்தரம் சாலையில் ஆக்கிரமிப்பில் உள்ள 80 அடி சாலையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சின்னச்சாமி நிதிநிலை அறிக்கையினை சமர்பித்தார். இணை செயலாளர் முகமது ரபீக்,  36வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top