Close
மே 9, 2024 11:37 மணி

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புகையிலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவத்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட
விழிப்புணர்வு நிகழ்வை புதுநகர் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், வட்டார ஆய்வாளர் மகேஷ்வரன் ஆகியோர் பங்கேற்று  விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர்.
சிறப்பு பார்வையாளராக  மாவட்ட தொற்றா நோய்கள் மேற்பார்வையாளர் முத்துதுகுமாரசுவாமி பங்கேற்று போதைப்பொருட்களை தடுப்பதன் அவசியம் குறித்தும் அதனை பயன்படுத்துவோருக்கு
ஏற்படும் தீங்குகள் அதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படும் விளைவுகள் ஆகியவை குறித்து எடுத்துக் கூறினார்.
நிகழ்வில் புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், பள்ளியின் பசுமைப்படை பொறுப்பாளர் ஆசிரியர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top