Close
மே 10, 2024 9:33 காலை

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

புதுக்கோட்டை

வானவில் மன்றத்தின் மூலம் எளிய பரிசோதனைகளை ஆசிரியர்கள் ஆ.மணிகண்டன், கே.அய்யப்பன் செய்து காட்டினர்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.
நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு உறுப்பினர் நியூஸ் எம் ராஜேந்திரன் கலந்துகொண்டு தமிழக அரசு மாணவர்களுக் காக செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். மன்ற தொடக்க விழாவில் உதவி தலைமை ஆசிரியர் எஸ். தெய்வீகன் வரவேற்றார்.

வானவில் மன்றத்தின் மூலம் வேதியியல் எளிய பரிசோதனை கள், இயற்பியல் மற்றும் உயிரியல் எளிய பரிசோதனைகள் உள்ளிட்ட அறிவியல் சோதனைகளை அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், கே.அய்யப்பன் ஆகியோர் செய்து காட்டினர்.
கணிதம் சார்ந்த சில செய்முறைகளை கணித ஆசிரியர்கள் ஓ சித்ராதேவி , எஸ்.அப்பாஸ்மந்திரி , கே.மும்தாஜ் பேகம் ஆகியோர் செய்து காட்டினர். இந்நிகழ்வை  மாணவர்கள் ஆர்வத்துடடன் உன்னிப்பாகக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top