Close
மே 20, 2024 9:38 மணி

புதுகை சமஸ்தானத்தின் எட்டாம் மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் 147 -வது பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் எட்டாம் மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் உருவச்சிலைக்கு மரியாதை செய்த மன்னர் பரம்பரையினர்

தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எட்டாவது மன்னராகப் பொறுப்பு வகித்து புதுக்கோட்டை சமஸ்தானத்தை 42 ஆண்டுகள்  ஆட்சி செய்த ஸ்ரீ பிரகதாம்பாள் தாஸ் மார்த்தாண்ட பைரவதொண்டைமான் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் 27 -11 -2012 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள  மாமன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின்  உருவச்சிலைக்கு, சமஸ்தானத்தின் பத்தாவது மன்னர் ஸ்ரீ பிரகதாம்பாள்தாஸ் ராஜாராஜகோபால தொண்டைமான், சாருபாலா தொண்டைமான் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், மாமன்னர் நூற்றாண்டு விழா குழு செயலர் ரா. சம்பத்குமார், மூத்த வழக்குரைஞர்கள் ஏ. சந்திரசேகரன், சின்ராஜ்,  ராமநாதன்,  பாலகிருஷ்ணன், கவிஞர் ச. பாரதி, டாக்டர் கே.ஹெச். சலீம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஏ. இப்ராஹிம்பாபு உள்ளிட திரளானோர் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top