Close
செப்டம்பர் 20, 2024 1:41 காலை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஐடிஐ மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல்

புதுக்கோட்டை

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற புதுகை அரசு ஐடிஐ மாணவர்களுக்கு ஆடைகள் வழங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலுப்பூர் தனியார் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  மண்டல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற  புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு  கொள்ள லோயர் மற்றும் ஜெர்கினை புதுக்கோட்டை தாரகை நிறுவனத்தினர் வழங்கினர்.

நிகழ்ச்சியில்,  அரசினர் தொழில்பயிற்சி நிலைய முதல்வர் எஸ் .குமரேசன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா, செயலாளர் இப்ராஹிம் பாபு, துணைச் செயலாளர் முகமது அப்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு சீருடைகளை வழங்கினர்.

பயிற்சியாளர்கள் பி. மனோகரன், எஸ். கிருஷ்ணன், ஆர். ராமராஜ் மற்றும் நிலைய விளையாட்டு பயிற்சிஅலுவலர்  கதிரேசன் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி மற்றும் அலுவலர்கள் ரமேஷ் பழனி குமார் ஆனந்த் மருந்தாளுனர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top