Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

தென்னக ரயில்வே முதன்மை வணிக மேலாளராக பி.ரவீந்திரன் பொறுப்பேற்பு

சென்னை

தென்னக ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக பி. ரவீந்திரன்  பொறுப்பேற்றுக் கொண்டார். 

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்ற ரவீந்திரன் 1988 -ஆம் ஆண்டு இந்தியன்  ரயில்வே போக்குவரத்து பணிக்கு (ஐ ஆர் டி எஸ் )தேர்வு செய்யப்பட்டார்.
ரயில்கள் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியுள்ள ரவீந்திரன் இதற்கு முன்பாக தலைமை சரக்கு போக்குவரத்து கழக மேலாளர்,கண்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொது மேலாளர், ரயில்வே கோட்ட மேலாளர், சென்னை துறைமுகத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் ஏற்கெனவே பணியாற்றியுள்ளார்.
சென்னை கோட்டத்தில் முதுநிலை கோட்ட மேலாளராக இருந்தபோது சிறப்பாக பணிபுரிந்தமைக்காக ரயில்வே அமைச்சரின் சிறப்பு விருது ரவீந்திரனுக்கு வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top