Close
மே 19, 2024 2:07 காலை

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்தி பிறந்தநாள் கருத்தரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டைஅறிவியல் இயக்க அரங்கத்தில் தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமையில் நடந்த கருத்தரங்கில் பேசிய கந்தவர்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் புதுக்கோட்டை, ஆலங்குடி, கரம்பக்குடி என மூன்று மையங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு புதுக்கோட்டைஅறிவியல் இயக்க அரங்கத்தில் தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமையில் “மகாத்மா மண்ணில் மக்கள் ஒற்றுமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கந்தவர்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்மா.சின்னதுரை, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும்  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் அ.சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் பங்கேற்றுள்ள மதசார்பற்ற அரசியல்இயக்கங்கள், தொழிற்சங்க, வாலிபர், மாணவர், மாதர், ஓய்வு பெற்றோர், அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பிலும் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அ.மணவாளன் வரவேற்றார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் அசோகன் நன்றி கூறினார். இதில், மாணவ மாணவியர் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top