Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது:தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

முதலமைச்சர் இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000- ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.8.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பி யவர்களாகவும், மார்ச் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண் டாற்றி இருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்து தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடிய தாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,  பள்ளிகளில் பணியற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கை விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2023 அன்று மாலை 4 மணி ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தவுடன் அனைத்து விண்ணப்பதாரர் களும் தங்களுடைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும்.

எனவே மேற்கண்ட நிதியாண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் அலைபேசி எண் 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top