Close
செப்டம்பர் 20, 2024 5:38 காலை

வரத்துவாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள்.. ஆட்சியர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கால்வாயை பார்வையிட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலத்தை யொட்டி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்துநிலையம் எதிரில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (06.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது;புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்து நிலையம் எதிரில், மழைக்காலத்தை யொட்டி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த வரத்து வாய்க்கால்கள் தூர்வாருவதன் மூலம் மழைக் காலங்களில் மழைநீர் தேக்காமல் சீராக செல்வதற்கு உதவியாக இருக்கும். மேலும் வரத்து வாய்க்கால்களை உரிய காலத்திற்குள் விரைவாக தூர்வாரிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், உதவிப் பொறியாளர் கலியகுமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top