Close
அக்டோபர் 5, 2024 10:29 மணி

45 ரூபாய்க்கு வெரைட்டி ரைஸ்..! தேனிவாசிகளின் பசியாற்றும் சாலையோர உணவகம்..!

தேனி

தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிரே பெரியகுளம் ரோட்டோரம் புளியமரத்தடியில் தள்ளுவண்டியில் சுகாதாரமான முறையில் உணவு விற்கும் ஜெயபாண்டி.

அரை கிலோ வெரைட்டி ரைஸ் ரூபாய் 45 விற்பனை செய்யும் சாலையோர வியாபாரி தேனி ஜெயபாண்டி.

தேனியில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே 33 ஆண்டுகளாக வெரைட்டி ரைஸ் விற்பனை செய்யும் சிறு வியாபாரி ஜெயபாண்டி. இவர் 45 ரூபாய்க்கு அரைகிலோ உணவு வழங்குகிறார். இதுவரை உணவுகளை பாலிதீன் பைகளில் வழங்கியதில்லை. பரிந்துரைக்கப்பட்ட சுகாதாரமான டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்வதால், போலீசார், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

தேனியில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே புளியமரத்தடியில் ஒரு தள்ளுவண்டியில் 31 ஆண்டுகளாக சாலையோர உணவகம் நடத்தி வருபவர் ஜெயபாண்டி(66). இவர் ஆரம்பகாலங்களில் வாழை இலையில், உணவுகளை மடித்து பேக்கிங் செய்து விற்பனை செய்து வந்தார். தற்போது வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்படவும், உணவுகளை அடைத்து விற்பனை செய்ய பரிந்துரைக்கப்பட்ட டப்பாக்களில் (ஒரு டப்பா 7 ரூபாய்) வெரைட்டி ரைஸ்களை அடைத்து விற்பனை செய்கிறார்.

முட்டை பிரியாணி, தக்காளி சாதம், மிளகு சாதம், தயிர்சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் என பல வகை சாதங்களை குழம்பு, துவையல், ஊறுகாயுடன் விற்பனை செய்கிறார். ஒரு டப்பாவில் அரைகிலோ உணவு பிடிக்கிறது.

தேனி
தேனியில் ரூ.45 -க்கு கிடைக்கும் சுவையான வெரைட்டி ரைஸ்

இதன் விலை 45 ரூபாய் என நிர்ணயித்துள்ள ஜெயபாண்டி, டப்பாவிற்கும் சேர்த்து 45 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறார். ஆனால் உணவு தரமாகவும், சுத்தமாகவும் இருப்பதால், போலீசார், வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர் கள் என பலரும் இவரது வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

காலை 10 மணிக்கு கடை விரி்க்கும் ஜெயபாண்டி மதியம் 1.30 மணிக்குள் வியாபாரத்தை முடித்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:

நான் 28 ஆண்டுகளாக உணவு வியாபாரம் செய்கிறேன். வாழை இலை மட்டுமே பயன்படுத்துவேன். பாலுதீன் பேப்பரோ, பைகளோ இதுவரை பயன்படுத்தியதில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு என் மீது நல்ல மரியாதை உண்டு. தற்போது வாழை இலை கிடைப்பதில்லை. எனவே சுகாதாரப்பிரிவு அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட  டப்பாக்களில் விற்பனை செய்கிறேன்.

இந்த டப்பாவின் விலை மட்டும் 10 ரூபாய் ஆகும். நான் மொத்தமாக விலைக்கு வாங்குவதால் ஒரு டப்பாவிற்கு ஏழு ரூபாய் விலை கிடைக்கிறது. இதில் அரைகிலோ உணவு அடைத்து 40 ரூபாய்க்கு விற்கிறேன். உணவுக்காக எனக்கு 38 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.

எவ்வளவோ மிகப்பெரிய ஓட்டல்கள் வந்து விட்ட நிலையிலும் நான் விற்கும் உணவுகள் ஒரு நாள் கூட மீதம் ஆனதில்லை. அந்த அளவு என் வாடிக்கை யாளர்கள் திருப்தியாக உள்ளனர். இதுவே எனக்கு மனநிறை வை தருகிறது என்கிறார் ஜெயபாண்டி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top