Close
ஏப்ரல் 24, 2026 12:50 காலை

கூடலுாரில் இருந்து துாத்துக்குடிக்கு சென்ற நிவாரண பொருட்கள்

தேனி

கூடலூரிலிருந்து தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைத்த பாரதிய கிஸான் சங்கத்தினர்

கூடலுாரில் இருந்து துாத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால், பாதி க்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவாபாரதி அமைப்பினர் திருமண மண்டபம் பிடித்து உணவு சமைத்து வருகின்றனர்.

இவர்கள் உணவுசமைத்து வழங்க உதவியாக தேனி மாவட்டம் கூடலுாரில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் இணைந்து 4 டன் காய்கறிகளை சேர்த்து, பாரதிய கிஸான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு தலைமையில் அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய கிஸான்  சங்க செயலாளர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், துணைச் செயலாளர் கர்ணன், உறுப்பினர் சரண் உட்பட பலர் பங்கே ற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top