Close
ஜூலை 7, 2024 8:52 காலை

புதுகை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர் எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆடைகள் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர் எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் சார்பில் புத்தாடை வழங்கல்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர் எஸ்.பி.ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் லிம்டெக்செங்- ஹொபோலுவன் தம்பதி சார்பில் உதவி பொருட்களை புதுக்கோட்டை ஏசிஎஸ்-பாரத் மனிதவள மேம்பாடு அதிகாரி மூலம் உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகள் வழங்கினர்.

புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்தில் உள்ள பூம் பூம் மாட்டுக்காரர்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கும் விதமாக ஹேண்டில் தொண்டு நிறுவன நிர்வாக அலுவலர் பழனிச்சாமி ஆலோசனையின் படி, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பி.அசோகன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் சங்கத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜா, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன் முன்னிலையில் வழங்க, ஆர்.உமாதேவி அதனைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், பொருளாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top