Close
செப்டம்பர் 13, 2024 1:08 காலை

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.6.40 கோடியில் சாலைப்பணிகள் தொடக்கம்

சிவகங்கை

சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை ஊராட்சியில்  தொடங்கிய பிரதம மந்திரி கிராம சாலைத்திட்ட சாலைப்பணி.

சிவகங்கை: சிவகங்கை அருகே பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் மூலம் ரூ.6.40 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி  தொடங்கியது.

சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை ஊராட்சியில் அரசணிப்பட்டியிலிருந்து வஸ்தாபட்டி வழியாக கருங்காபட்டி வரை 8 கிமீ தொலைவு வரை   ரூ.6.40 கோடியில் சாலை அமைக்கப்படும் இச்சாலை கனரக வாகனங்கள்  செல்லத்தகுந்த வகையில் அமைக்கப்படுகிறது.  சாலைப்ணியை  ஊராட்சி மன்றத்தலைவர் மலைச்சாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top